இந்த ரெண்டு பேரை மட்டும் முறைச்சுப் பார்க்கக் கூடாது!

Aadmika
Aug 16, 2023,04:45 PM IST
சென்னை: வாய் விட்டு சிரித்தால்.. நோய் விட்டுப் போகுமாம்.. அது போகுதோ இல்லையோ.. வாய் விட்டுச் சிரிச்சா கண்டிப்பா மனசு லேசாகும், டென்ஷன் குறையும், உற்சாகம் கிடைக்கும், எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம் என்ற தைரியம் பிறக்கும். அதுக்காகவாவது அப்பப்ப சிரிச்சுக்கிட்டா நல்லதுதான்.

என்னங்க சிரிப்பு வரலையா.. அப்ப வாங்க.. இந்த ஜோக்ஸ் படிங்க..!



நண்பன் 1 : இந்த உலகத்துல ரெண்டு பேர ரொம்ப நேரம் முறைச்சு பார்க்கக் கூடாது
நண்பன் 2 : யாருடா அந்த ரெண்டு பேரு?
நண்பன் 1 : ஒன்று சூரியன்...இன்னொன்னு பொண்டாட்டி

--

அவன் - ஏன்டா கணக்கு டீச்சர் ரொம்ப சோகமாக இருக்காங்க
இவன் - அவங்களுக்கு ஏகப்பட்ட Problems இருக்காம்!

--

அவங்க - ஏன்டி உன்னோட ஆளை பளார்னு அடிச்சே
இவங்க - பின்ன என்னடி.. Seafood வாங்கித் தர்ரேன்னு பீச்சுக்குக் கூட்டி வந்துட்டு.. இதுதான் Sea.. இந்தா பஜ்ஜி.. இதுதான் foodன்னு சொன்னா.. அடிக்காம கொஞ்சுவாங்களா!

--

டாக்டர் - ஆமா உங்க மனைவி தனியா இருக்கும்போது அவராகவே பேசிக் கொள்கிறாராமே தெரியுமா..
கணவர்  - எனக்குத் தெரியாது டாக்டர்
டாக்டர் - என்னங்க சொல்றீங்க.. நீங்கதானே கணவர்.. இது கூடவா உங்களுக்குத் தெரியாது.
கணவர் - ஆமா டாக்டர், அப்பதான் நான் அவங்க கூட இருக்க மாட்டேனே.. எனக்கு எப்படித் தெரியும்!