IPL auction 2024: என்னப்பா சொல்ற.. கை நிறைய பணத்தை அள்ளிட்டு வர்றாங்களா..?

Su.tha Arivalagan
Dec 19, 2023,11:12 AM IST

துபாய்:  ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் கலந்து கொள்ளும் அணிகளிலேயே மிகப் பெரிய  பணக்கார அணியாக குஜராத் டைட்டன்ஸ்தான் கலந்து கொள்கிறது. இந்த அணி ரூ. 38.15 கோடியுடன் ஏலத்தில் பங்கேற்கிறது.


துபாயில் இன்று ஐபிஎல் 2024 வீரர்கள் ஏலம் நடைபெறவுள்ளது. இதில் 333 வீரர்களை ஏலம் விடவுள்ளனர். இதில் 10 அணிகளும் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான வீரர்களை ஏலத்தில் எடுக்கவுள்ளனர்.




மொத்தம் 77 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட வேண்டும். 333 பேரிலிருந்து இவர்களில் யாரை எந்தெந்த அணி எடுக்கப் போகிறது என்பது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பத்து அணிகளும் கை நிறைய நிறைய பட்ஜெட்டுடன்தான் ஏலத்தில் பங்கேற்கவுள்ளன. எனவே முக்கிய வீரர்களுக்கு கிராக்கி அதிகரிக்கும் வாய்ப்புகளும் உள்ளன.


குஜராத் டைட்டன்ஸ் அணியிடம்தான் அதிக பட்ஜெட் உள்ளது. அதாவது ரூ. 38.15 கோடியைக் கையில் வைத்துள்ளது. அடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ. 34 கோடியுடன் இருக்கிறது. அதேபோல கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ. 32.7 கோடியுடன் களத்தில் இறக்குகிறது.  இவரக்ளுக்கு அடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் அதிக பட்ஜெட் உள்ளது. அதாவது ரூ. 29.1 கோடி கையில் வைத்திருக்கிறது.




டெல்லி கேப்பிடல்ஸ் ரூ. 28.9 கோடி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரூ. 23.25,  மும்பை இந்தியன்ஸ் ரூ. 17.25 கோடி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ரூ. 13.15 கோடி, ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ. 14.5 கோடியுடன் ஏலத்தில் பங்கேற்கவுள்ளன.


டிராவிஸ் ஹெட் உள்ளிட்ட சில வீரர்களுக்கு நல்ல கிராக்கி உள்ளது. அவர்களை எடுக்க அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.