சந்திரனை மட்டுமல்ல.. சூரியனையும் தொடப் போறோம்.. தமிழிசை பெருமிதம்

Su.tha Arivalagan
Aug 31, 2023,08:44 AM IST
ஹைதராபாத்: நாம் சந்திரனை மட்டுமல்ல.. சூரியனையும் கூட தொடப் போகிறோம். வரும் காலத்தில் சந்திரனிலும் கூட நாம் ரக்ஷா பந்தன் கொண்டாட முடியும் என்று தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.

ஹைதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் ரக்ஷா பந்தன் விழா நடைபெற்றது. அதில் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நிலவை மட்டுமல்ல, நாம் சூரியனையும் கூட அடையப் போகிறோம்.  நிலவிலும் கூட போய் நாம் ரக்ஷா பந்தனை எதிர்காலத்தில் கொண்டாடுவோம்.  நமது பாரதத் தாயின் புதல்வர்கள் குறித்து நாம் பெருமைப்படுகிறோம்.  இன்று நாம் இங்கு இந்த பூமியில் ரக்ஷா பந்தனைக் கொண்டாடுகிறோம். நாளை நிலவிலும் இதைக் கொண்டாடுவோம்.



\நமது விண்வெளி விஞ்ஞானிகளால் நாடு பெருமை அடைந்துள்ளது. நாம் பெருமை அடைந்துள்ளோம்.  இந்த சூழலை ஏற்படுத்திக் கொடுத்த பிரதமருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். நமது விஞ்ஞானிகள் மிகச் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

நமது நாட்டில் பல மாநிலங்கள் உள்ளன,  பல மொழிகள் உள்ளன. பழக்க வழக்கங்கள் பல உள்ளன. கலாச்சார வேறுபாடு உள்ளது. இப்படிப்பட்ட நாட்டில்நாம் ஒற்றுமையுடன் இருக்கிறோம் என்பது பெருமையானது.  அதுதான் ரக்ஷா பந்தன் விழாவின் முக்கிய அம்சமாகும் என்றார் தமிழிசை