முதல் முறையாக.. இந்தியா - ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தொடர்.. ஜனவரியில் காத்திருக்கு செம விருந்து!
டெல்லி: இந்தியா - ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே முதல் முறையாக முழு அளவிலான கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ளது.
இரு அணிகளும் 3 டிவென்டி 20 போட்டிகளில் மோதவுள்ளன. இந்தத் தகவலை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்தியாவில் இந்தப் போட்டிகள் நடைபெறும்.
ஜனவரி 11ம் தேதி மொஹாலி மைதானத்தில் முதல் போட்டி நடைபெறும். 14ம் தேதி இந்தூரில் 2வது போட்டியும், ஜனவரி 17ம் தேதி பெங்களூருவில் 3வது போட்டியும் நடைபெறும்.
நடந்து முடிந்த உலகக் கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக ஆடியது. பெரிய பெரிய ஜாம்பவான் அணிகளை பந்தாடியது. இங்கிலாந்தை அது வீழ்த்திய விதம் அனைவரையும் அதிர வைத்தது. உலகக் கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 4 வெற்றிகளைப் பெற்று 6வது இடத்தைப் பிடித்து சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குத் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டி20 தொடர் ஆப்கானிஸ்தான் அணிக்கு நல்லதொரு பயிற்சியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. அதேசமயம், இந்தியாவுக்கு டஃப் தரும் வகையில் ஆப்கானிஸ்தான் கண்டிப்பாக ஆட முயற்சிக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை.