தமிழ்நாட்டில்.. இன்று 6 மாவட்டங்கள், நாளை 13 மாவட்டங்களில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்!

Manjula Devi
Aug 13, 2024,06:30 PM IST

சென்னை:   தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்,2 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக அநேக இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது.


இதனிடையே தற்போது  தமிழ்நாட்டில் எந்தெந்த பகுதிகளில் இன்றும் நாளையும் மழை பெய்யும் என்ற அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.




கனமழை:


அதன்படி தேனி, திண்டுக்கல், ஈரோடு, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


மிக கனமழை:


நீலகிரி, கோவையில் இன்று ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது 12 முதல் 20 சென்டிமீட்டர் வரையிலான மழை பெய்யக்கூடும் என்பதால்  நீலகிரி, கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது .


நாளை கன மழை: 


நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், நெல்லை, கோவை, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஆகிய 13 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்