அடுத்த 5 நாட்களுக்கு.. 17 மாவட்டங்களில் மழை இருக்கு.. சென்னைக்கும் உண்டு பாஸ்!

Su.tha Arivalagan
Mar 25, 2023,03:20 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு 17 மாவட்டங்களில் மிதமானது முதல் கன மழை வரை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வாநிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

25ம் தேதியான இன்று லேசானது முதல் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், ராணிப்பேட்டை, கரூர், திருச்சி, தென்காசி மாவட்டங்களில்  நல்ல மழை பெய்துள்ளது.



26ம் தேதியான நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் மிதமானது முதல் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது.

27 மற்றும் 28 ஆகிய நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரியில், ஓரிரு இடங்களில் மிதமானது முதல் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது.

29ம் தேதி மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.