"தத்தம் தளாங்கு தத்தோம்".. இடியுடன் விட்டு வெளுத்த மழை.. மிரண்டது சென்னை!

Su.tha Arivalagan
Aug 10, 2023,03:31 PM IST
சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளை இன்று மாலை அடித்து நொறுக்கி மழை பெய்தது. இடியுடன் கூடிய இந்த மழையால் சென்னையின் வெப்பம் சற்றே தணிந்தது. 

தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து வெயில் வெளுத்தபடி இருக்கிறது. இது 2வது கோடை காலமா என்று சந்தேகப்படும் அளவுக்கு வெயில் வறுத்தெடுத்தது. இரவில் தூங்கவே முடியவில்லை, புழுக்கம் அதிகமாகவே இருந்தது.



இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.குறிப்பாக மதுரை
உள்ளிட்ட பகுதிகளில் மழை காணப்பட்டது. இன்று தமிழ்நாட்டின் வட பகுதிகளில் மழை காணப்பட்டது. குறிப்பாக சென்னையிலும் புறநகர்ப் பகுதிகளிலும் இன்று மாலை மழை வெளுத்தெடுத்தது.

குறிப்பாக புறநகர்ப் பகுதிகளில் கிட்டத்தட்ட  அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. தாம்பரம், படூர், கேளம்பாக்கம், சிறுசேரி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பிரித்து மேய்ந்து விட்டது.

மிகப் பெரிய அளவில் திரண்ட கரு மேகங்களுடன் மழை கொட்டித் தீர்த்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வெயிலின் வெப்பம் குறைந்தாலும் கூட புழுக்கம் போகவில்லை. மழை நின்று வெகு நேரம் பெய்தால்தான் புழுக்கத்திற்கு விடை கிடைக்கும். இல்லாவிட்டால் சிக்கல்தான்.



தற்போது புறநகர்களில் நல்ல மழை பெய்து வந்த நிலையில் மெல்ல மெல்ல நகருக்குள்ளும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.

இன்று தமிழ்நாடு முழுவதும் நல்ல மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேனும் கூறியுள்ளதால் மக்கள் ஹேப்பி அண்ணாச்சி!