தியேட்டர்களில் கோட் பட பேனர்.. உள்ளாட்சி நிர்வாக அனுமதியே போதுமானது.. ஹைகோர்ட் பெஞ்ச் உத்தரவு

Meenakshi
Sep 04, 2024,04:18 PM IST

மதுரை: விஜய் நடித்த கோட் படம் நாளை வெளியாக உள்ள நிலையில் பிளக்ஸ் பேனர் வைக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், உள்ளாட்சி நிர்வாகத்தை அணுகி அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


தமிழ்நாடு முழுவதும் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி நாளை வெளிவர உள்ள கோட் படத்தின் பீவர் தான். தி கோட் எப்படி இருக்கும், அதில் விஜய்யின் ரோல் என்னவாக இருக்கும், சண்டை படமா? குடும்ப படமா? விஜயகாந்த் ஏஐ தொழிநுட்பம் ஏன் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று பல கேள்விகளை சுமந்து கொண்டு விஜய் ரசிகர்கள் வலம் வருவது நாம் அனைவரும் அறிந்தே.  இந்நிலையில், தி கோட் படத்தின் புரோமோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் அர்ச்சனா அறிவிப்பு வேறு வெளியிட்டுள்ளார். அது விஜய் ரசிகர்களிடையே மேலும் ஆர்வத்தை தூண்டி விட்டுள்ளது.




இது ஒருபுறம் இருக்க இந்த படம் குறித்த தகவல்களும் ஒவ்வொன்றாக இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார். விஜய்,  சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், லைலா, வைபவ், அஜ்மல், அரவிந்த், உள்ளிட்ட முக்கிய திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் நாளை செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக தயாராகி உள்ளது. படம் வெளியாவதற்கான இறுதி கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


இந்நிலையில், விஜய் நடித்த கோட் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் பிளக்ஸ் பேனர் வைக்க அனுமதி கோரி மதுரை உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தேனியை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவராக இருக்கக் கூடிய லெப்ட் பாண்டி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், பிளக்ஸ், பேனர்கள் வைக்க  உள்ளாட்சி நிர்வாகத்தை அணுகி அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பிளக்ஸ், பேனர் வைக்க காவல்துறை அனுமதி தேவையில்லை. மனு தாரர்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தை அணுகி  அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்