பிப்ரவரி 28 - இன்று எந்த நேரத்தில், என்ன செய்தால் நல்லது நடக்கும்?

Aadmika
Feb 28, 2023,09:02 AM IST

இன்று பிப்ரவரி 28 செவ்வாய்கிழமை. சுபகிருது ஆண்டு - மாசி 16

கரிநாள். இன்று காலை 06.53 துவங்கி, நாளை காலை 08.03 வரை நவமி. வளர்பிறை மேல்நோக்கு நாள்.


காலை 06.52 வரை அஷ்டமி திதி, அதற்கு பிறகு நவமி திதி. காலை 11.21 வரை ரோகிணி நட்சத்திரம், பிறகு மிருகசீரிஷம். காலை 11.21 வரை அமிர்தயோகம், பிறகு சித்தயோகம்


நல்ல நேரம் : 


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.00 வரை


Exit Polls: திரிபுரா , நாகாலாந்து தேர்தல்களில் பாஜக வெல்லும்.. எக்ஸிட் போல்


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - மாலை 3 மணி முதல் 4.30 வரை

எமகண்டம் - காலை 9 மணி முதல் 10.30 வரை


இன்று என்ன செய்ய நல்ல நாள் ?


மருத்துவ சிகிச்சை துவங்குவதற்கு, மல்யுத்த பயிற்சி துவங்குவதற்கு, சிற்பம் சார்ந்த பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.


இன்று யாரை வழிபட வேண்டும் ?


இன்று வராகி அம்மனை வழிபட எண்ணத் தெளிவு உண்டாகும். இன்று ரோகிணி நட்சத்திரம் என்பதால் குழந்தை கிருஷ்ணரையும், பால முருகனையும் வழிபட வேண்டும் வேண்டிய நாள். முருகனை உள்ள உருக பிரார்த்தனை செய்தால் அவனின் பரிபூரண அருள் கிடைக்கும்.