பிப்ரவரி 27 - இன்று நல்ல காரியம் செய்யலாமா ?

Aadmika
Feb 27, 2023,09:37 AM IST
இன்று பிப்ரவரி 27, திங்கட்கிழமை. சுபகிருது ஆண்டு மாசி 15.
இன்று கரிநாள். வளர்பிறை அஷ்டமி - கீழ்நோக்கு நாள்.



காலை 05.55 வரை சப்தமி. பிறகு அஷ்டமி. இன்று அதிகாலை 05.56 துவங்கி, பிப்ரவரி 28 ம் தேதி காலை 06.52 வரை அஷ்டமி திதி உள்ளது. காலை 09.58 வரை கிருத்திகை நட்சத்திரமும், பிறகு ரோகிணி நட்சத்திரமும் உள்ளது.

காலை 06.29 வரை சித்தயோகமும், 09.58 வரை மரண யோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :

காலை - 06.30 முதல் 07.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை


நான் வர மாட்டேன்... குக் வித் கோமாளியில் இருந்து விலகிய மணிமேகலை.. ரசிகர்கள் ஷாக்!


கெளரி நல்ல நேரம் :

காலை - 09.30 முதல் 10.30 வரை 
மாலை - 07.30 முதல் 08.30 வரை

ராகு காலம் - காலை 07.30 முதல் 9 மணி வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை

இன்று என்ன காரியங்கள் செய்யலாம் ?

அபிஷேகம்  செய்வதற்கு, வாகன பழுதுகளை சரி செய்வதற்கு, பிரச்சனைகளை பேசி தீர்வு காண்பதற்கு ஏற்ற நாள். இன்று கரிநாள், அஷ்டமி என்பதனால் சுபகாரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டிய நாள்.

யாரை வழிபட வேண்டும்?

இன்று வளர்பிறை அஷ்டமி என்பதனால் கால பைரவரை வணங்க நன்மைகள் நடைபெறும். நமக்கு வேண்டிய வேண்டுதல்களை முன் வைத்து வழிபட்டால் நினைத்தது நடக்கும். பைரவரிடம் வரங்களை வேண்டி பெறுவதற்கு ஏற்ற நாள் வளர்பிறை அஷ்டமி நாளாகும்.