240 பாடகர்கள்.. 120 டூயட் பாடல்கள்.. 12 மணி நேரம்.. எஸ்பிபிக்கு ஒரு அஞ்சலி!

Su.tha Arivalagan
Sep 22, 2023,11:37 AM IST

சென்னை: மறைந்த பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு இசை அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு சாதனை இசை நிகழ்ச்சி சென்னையில் நாளை நடைபெறவுள்ளது.


சென்னையைச் சேர்ந்த பீனிக்ஸ் க்ரூ கிளப் அமைப்பின் சார்பில் சென்னையில் நாளை ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனைக்காக ஒரு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 240 பாடகர்கள் கலந்து கொண்டு 120 எஸ்பிபி டூயட் பாடல்களை, 12 மணி நேரம் இடை விடாமல் பாடவுள்ளனர். இந்த நிகழ்ச்சி புக் ஆப் ஆசியா ரெக்கார்ட்ஸில் இடம் பெறவுள்ளது.




நிகழ்ச்சியில் தலைமை விருந்தினர்களாக கவிஞர் முத்துலிங்கம், இசையமைப்பாளர் பாலபாரதி,  நடிகை நளினி, பின்னணிப் பாடகி நிர்மலா நரசிம்மன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.


சென்னை தி.நகர் ஜிஎன் செட்டி சாலையில் உள்ள சர் பிட்டி தியாகராயா ஆடிட்டோரியத்தில் செப்டம்பர் 23ம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணிக்கு நிகழ்ச்சி முடிவடையும்.


விழாவில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு பீனிக்ஸ் க்ரூ கிளப் நிறுவனர் கோமதி ஞானம் மற்றும் இணை நிறுவனர் டி. ரமேஷ் ஆகியோர் அழைத்துள்ளனர்.