11 பாட்டில் மதுவைக் குடித்து விட்டு.. தாய், மகளிடம் சில்மிஷம்.. ஓடும் விமானத்தில் ஷாக்!

Su.tha Arivalagan
Jul 30, 2023,12:55 PM IST
நியூயார்க்: நியூயார்க்கிலிருந்து கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகருக்குச் சென்று கொண்டிருந்த விமானத்தில் பயணித்த ஒரு பயணி, 11 பாட்டில் மதுவை அருந்தி விட்டு, தனக்கு அருகில் பயணித்த தாயையும், அவரது மகளையும் பாலியல் ரீதியாக சீண்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிட்டத்தட்ட 9 மணி நேர பயணத்தையும் நரகமாக்கி விட்டார் இந்த குடிகார பயணி. அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்காத டெல்டா ஏர்லைன்ஸ் மீது பாதிக்கப்பட்ட தாயும், மகளும் 20 லட்சம் டாலர் நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

அந்த குடிகாரரின் தொல்லை குறித்து பலமுறை தாயும், மகளும், விமான ஊழியர்களிடம் புகார் கூறியுள்ளனர். ஆனால் அவர்களோ கண்டு கொள்ளவில்லையாம். காதுகொடுத்தும் கேட்கவில்லையாம். மாறாக அந்த குடிகாரர் மது கேட்க கேட்க, கொடுத்துக் கொண்டே இருந்துள்ளனர். கிட்டத்தட்ட 11 மது பாட்டில்களை அவர் குடித்துக் காலி செய்துள்ளார்.




அந்த நபர் மீதும், விமான நிறுவனம் மீதும் தற்போது நியூயார்க் கிழக்கு மாவட்ட கோர்ட்டில் தாயும்  மகளும் வழக்குத் தொடர்ந்துள்ளனர். மது போதையில் தங்களிடம் அந்த நபர் அத்துமீறியதாகவும், பொருத்தமில்லாத இடங்களில் தொட்டு அட்டகாசம் செய்ததாகவும், இதுகுறித்து பலமுறை புகார் கூறியும் விமான நிறுவன ஊழியர்கள் அதை கண்டுகொள்ளவில்லை என்றும் அவர்கள் புகாரில் கூறியுள்ளனர்.

மேலும் விமானம் ஏதென்ஸ் வந்து சேர்ந்ததும், அந்த குடிகார நபரை போலீஸில் பிடித்துக் கொடுக்காமல் அவர் வெளியேற விமான ஊழியர்கள் உதவி செய்ததாகவும் வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை பொய் பிம்பம்.. விரைவில் உடையும்.. திருச்சி சூர்யா திடீர் டிவீட்!

அந்த குடிகார நபரின் பக்கத்து சீட்டில் 16 வயதான அந்த சிறுமி அமர்ந்திருந்தார். அவருக்கு அடுத்த சீட்டில் தாய் அமர்ந்திருந்தார். குடிகார பயணி முதலில் சாதாரணமான முறையில் பேசியுள்ளார். ஆனால் சிறுமி அதை விரும்பவில்லை. போதை ஏற ஏற அவரது பேச்சு ஆபாசமாகியுள்ளது, ஆபாச சைகை காட்டியுள்ளார். அட்ரஸ் கேட்டுள்ளார். கெட்ட வார்த்தையிலும் பேசியுள்ளார். அத்துமீறி உடல் ரீதியாகவும் சேட்டை செய்ய ஆரம்பித்துள்ளார். தட்டிக் கேட்ட தாயையும் அவர் திட்டி அத்துமீறி நடந்து கொண்டுள்ளார்.

அக்கம் பக்கத்து பயணிகளும் இதைப் பார்த்து அந்த நபரைக் கண்டித்துள்ளனர். ஆனால் அவர் அடங்கவில்லை. விமான ஊழியர்களும் அவரைக் கண்டிக்காததால், அத்துமீறி நடக்க ஆரம்பித்தார்.