தூத்துக்குடி மொத்தமாக துண்டிக்கப்பட்டிருக்கிறது.. குளங்கள் உடைஞ்சு போச்சு.. மாரி செல்வராஜ் வேதனை

Su.tha Arivalagan
Dec 18, 2023,07:08 PM IST

சென்னை: தூத்துக்குடி மாவட்டம் மொத்தமாக துண்டிக்கப்பட்டிருக்கிறது. எல்லாக் குளங்களும் உடைந்து போயிருக்கிறது என்று இயக்குநர் மாரி செல்வராஜ் வேதனை வெளியிட்டுள்ளார்.


வரலாறு காணாத மழை வெள்ளத்தில் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் சிக்கியுள்ளன. நெல்லையும், தூத்துக்குடியும் இன்னும் வெள்ள நீரில் மிதக்கின்றன. இப்படி ஒரு பெரு வெள்ள பாதிப்பை யாரும் எதிர்பார்க்கவில்லை.


இந்த துயரம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:




வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது. கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது. ஶ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுபாசனத்திற்கு உட்பட்ட அத்தனை கிராமங்களின் நிலையையும் அவ்வளவு கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது. மீட்பு வாகனங்களால் படகுகளால் எதிலும் உள்ளே செல்ல முடியவில்லை . வெள்ளத்தின்  வேகம் அப்படியிருக்கிறது. 


ஆதிநாதபுரம், செம்பூர், கரையடியூர் , பிள்ளமடையூர், மாநாட்டூர், கல்லாம்பறை, தேமான்குளம், மணத்தி, இராஜபதி, குருவாட்டூர், குரும்பூர் ,குட்டக்கரை, தென்திருப்பேரை மேலகடம்பா, இப்படி இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை தொடர்புகொள்ளவே முடியவில்லை. 


இந்த கிராமங்கள் எல்லாமே ஆற்றிற்கும் குளத்திற்கும் நடுவே உள்ள விவசாய வயல்வெளி கிராமங்கள், இதை கருத்தில்கொண்டு எதன் வழியாவது மீட்புபணிகளை மிக துரிதமாக மேற்கொள்ள வேண்டுகிறேன் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.