"தண்டகராண்யம்"... டப்பிங் பேசத் தொடங்கினார் அட்டக்கத்தி தினேஷ்  !

Su.tha Arivalagan
Aug 01, 2023,03:24 PM IST
சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் உருவாகும் தண்டகாரண்யம் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன.

அதியன் ஆதிரை இயக்கும் படம்தான் இந்த தண்டகாரண்யம். அட்டக்கத்தி தினேஷ், கலையரசன், ரித்விகா உள்ளிட்டோர் நடிக்க உருவாகியுள்ள இப்படம் திருவண்ணாமலை, ஜார்க்கண்ட் மாநிலத்தின் சில பகுதிகள், தலக்கோணம் காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.



படப்பிடிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து தற்போது டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன. தினேஷ் தான் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கான டப்பிங்கை தொடங்கியுள்ளார்.

தினேஷ் தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். அவரது குக்கூ படம் வெகுவாக பேசப்பட்டது.  அதேபோல தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்திலும் அவரது நடிப்பு பேசப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படத்திலும் அவரது கேரக்டர் பேசு பொருளாக இருந்தது.

தற்போது நடித்துள்ள தண்டகாரண்யம் அவரது நடிப்புக்கு மேலும் மெருகு சேர்க்கும் என்றும் அவருக்கு மிகச் சிறந்த படமாக இது அமையும் என்றும் படக் குழுவினர் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.