திராவிட பண்பாட்டை சிறுமைப்படுத்தும் வேலையை கைவிட வேண்டும்.. எடப்பாடி பழனிச்சாமி

Su.tha Arivalagan
Oct 18, 2024,08:36 PM IST

சென்னை: டிடி தமிழ் தொலைக்காட்சி விழாவில் தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும் என்ற வரியை விட்டு விட்டுப் பாடியது சர்ச்சையை எழுப்பியுள்ள நிலையில் இதை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் கண்டித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:




இன்று சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் மேதகு ஆளுனர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பெருமைக்குரிய தமிழ்தாய் வாழ்த்து பாடும் பொழுது அஃதில் வரக்கூடிய


"தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரிகள் புறக்கணிக்கப்பட்டது  மாபெரும் தவறாகும்.  இச்செயல் மிகவும் கண்டனத்திற்குரியது.


திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி! #திராவிடம் என்ற சொல் அடக்குமுறைக்கு எதிரான பெரும் புரட்சி!திராவிடம் என்ற சொல் உலகின் தொன்மையான நாகரீகத்தின் குறியீடு!


தமிழக மக்களின் உணர்வை புண்படுத்தும், திராவிட பண்பாட்டை சிறுமைப்படுத்தும்  வேலைகளை எவர் செய்து இருந்தாலும் கைவிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்