பாலியல் துன்புறுத்தல் சர்ச்சையில் சிக்கி.. பெங்களூரில் கைதான.. ஜானி மாஸ்டருக்கு 15 நாள் சிறை!

Meenakshi
Sep 20, 2024,05:25 PM IST

அமராவதி: பாலியல் புகாரில் சிக்கிய திரைப்பட நடன இயக்குநர் ஷேக் ஜானி பாஷா எனப்படும் ஜானி மாஸ்டருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.


தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடன இயக்குநராக இருப்பவர் ஜானி மாஸ்டர். தமிழில் ரஜினி, விஜய், தனுஷ் மற்றும் தெலுங்கில் அல்லு அர்ஜூன் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியவர் ஜானி மாஸ்டர்.




இந்நிலையில் ஜானி மாஸ்டர் மீது 21 வயது நிரம்பிய அவரது உதவி நடன பெண் கலைஞர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். கடந்த 2019 ஆண்டு முதல் ஹைதராபாத், சென்னை, மும்பை என படப்பிடிப்புக்கு சென்ற இடங்களில் எல்லாம் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் புகார் அளித்துள்ளார். மேலும், 21 வயதாகும் தன்னை  16 வயதில் இருந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதற்கு அவரது மனைவியும் உடந்தை என்று புகார் தெரிவித்திருந்தார்.


இது தொடர்பாக ஆந்திர போலீசார் மாஸ்டர் ஜானியை தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த ஜானியை பெங்களூரு போலீசார் நேற்று கைது செய்தனர். இவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர் போலீசார். தெங்கானா மாநிலம் உப்பரப்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய ஜானி மாஸ்டரை சஞ்சல்குடா சிறையில் 15 நாள் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அவரை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்