ஆசியா கோப்பை கிரிக்கெட்.. 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

Su.tha Arivalagan
Aug 21, 2023,02:54 PM IST

டெல்லி: ஆசியா கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் 18 பேர் இடம் பிடித்துள்ளனர்.


இந்திய அணி வீரர்களை தலைமை தேர்வாளர் அஜீத் அகர்கர் அறிவித்தார். அப்போது கேப்டன் ரோஹித் சர்மாவும் உடன் இருந்தார். 




அணி விவரம்:


ரோஹித் சர்மா (கேப்டன்)

சுப்மன் கில்

விராட் கோலி

ஷிரேயாஸ் அய்யர்

கே.எல். ராகுல்

சூர்யகுமார்யாதவ்

திலக் வர்மா

இஷான் கிஷன்

ஹர்டிக் பாண்ட்யா (துணை கேப்டன்)

ரவீந்திர ஜடேஜா

ஷர்துள் தாக்கூர்

அக்ஸார் படேல்

குல்தீப் யாதவ்

ஜஸ்ப்ரீத் பும்ரா

முகம்மது சமி

முகம்மது சிராஜ்

பி.கிருஷ்ணா

சஞ்சு சாம்சன்


உலகக் கோப்பை தொடரை மனதில் வைத்து இந்த அணியைத் தேர்வு செய்துள்ளதாம் இந்திய அணி தேர்வுக் குழு.  இதில் கே.எல்.ராகுல் மற்றும் ஷிரேயாஸ் அய்யர் ஆகியோர் காயம் காரணமாக சந்தேக வளையத்தில் இருந்தவர்கள். இருவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஐஸ்ப்ரீத் பும்ராவும் ஒரு ஆச்சரியகரமான சேர்ப்புதான். அயர்லாந்து டி20 தொடரிலும் பும்ரா சேர்க்கப்பட்டிருக்கிறார் என்பது நினைவிருக்கலாம்.