கைதிகளை நல்வழிப்படுத்த..  சூப்பர் திட்டம்.. திருக்குறள் வாசிங்க!

Su.tha Arivalagan
Sep 09, 2023,04:08 PM IST
கோவை: கோவை மத்திய சிறையில் கைதிகளை நல்வழிப்படுத்துவதற்காக தினமும் குறள் கூறும் பொருள் என்ற தலைப்பில் திருக்குறள் வாசிக்கப்படுகிறது.

கோவை சரக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் வழிகாட்டுதலின் படி சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா மேற்பார்வையில் திருக்குறள் வாசிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கோவை மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள், குண்டர் சட்டம் தடுப்பு பிரிவு கைதிகள், உயர் பாதுகாப்பு பிரிவு கைதிகள் என 1500க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகளுக்கு தினசரி கற்பித்தல், நூலகம் மூலம் வாசித்தல் பயிற்சி யோகா மற்றும் உடற்பயிற்சிகள் போன்றவை செயல்படுத்தப்படுகின்றன.

இதன் அடுத்த கட்டமாக சிறை வளாகத்தில் தினமும் ஒரு திருக்குறள் வாசிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  தினமும் காலை 7 மணிக்கு ஒரு கைதி மூலம் ஒரு திருக்குறள் வாசிக்கப்படுகிறது. அதற்குரிய பொருளையும் அந்த கைதி கூறுவார். சிறையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் உள்ள மைக்கில் திருக்குறளை வாசிப்பர். ஒவ்வொரு பிரிவிலும் மைக் உள்ளது. குறள் கூறும் பொருள் என்ற திட்டம் இந்த மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.