ரூ. 17,000 மதிப்பீட்டில்.. சென்னை பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே.. நிதின் கத்காரி அறிவிப்பு

Su.tha Arivalagan
Jan 06, 2023,09:52 AM IST
சென்னை: ரூ. 17,000 கோடி மதிப்பீட்டில் உருவாகும் சென்னை -பெங்களூரு எக்ஸ்பிரஸ் வே அடுத்த ஆண்டு தயாராகி விடும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கத்காரி தெரிவித்துள்ளார்.






10 லேன்களைக் கொண்டதாக இந்த சாலை அமையும். இதில் 6 லேன்கள் நேரடியாக பெங்களூரு - சென்னைப் போக்குவரத்துக்கானது. மீதமுள்ள நான்கு லேன்களும், இடது மற்றும் வலது பக்கமாக அமையும். இவை அருகாமை நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் போவதற்காக போடப்படுகின்றன. 

சென்னை பெங்களூரு  இடையிலான 6 வழிச் சாலையானது அப்படியே மைசூரு வரைக்கும் நீட்டிக்கப்படும். அதாவது சென்னையிலிருந்து இந்த சாலையில் நுழைந்தால் அப்படியே மைசூரு வரைக்கும் போகலாம்.

2024ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சென்னை  -பெங்களூரு நெடுஞ்சாலை தயாராகி விடும் என்றும் கத்காரி அறிவித்துள்ளார்.  இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் பெங்களூரு - மைசூரு நெடுஞ்சாலை தயாராகி விடும். இந்த சாலையைத் தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி அல்லது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஆகியோரில் ஒருவர் அழைக்கப்படுவார் என்றும் கத்காரி தெரிவித்துள்ளார்.