வம்பாக பேசி சிக்கிய ஆன்மீக பேச்சாளர்.. ஆர்.பி.வி.எஸ். மணியன் கைது

Meenakshi
Sep 14, 2023,11:31 AM IST

சென்னை:  பெரியார், திருவள்ளுவர், அம்பேத்கர் உள்ளிட்டோர்  குறித்து அவதூறாக பேசியதற்காக ஆன்மீக பேச்சாளர் ஆர்.பி.வி.எஸ். மணியன் கைது செய்யப்பட்டார்.

இந்துத்துவா சிந்தனையாளரும், ஆன்மீக பேச்சாளரும், வி.எச்.பி. முன்னாள் மாநிலத் துணைத் தலைவருமான ஆர்.பி.வி.எஸ். மணியன் சென்னையில் நடந்த கூட்டத்தில் பேசினார். திருவள்ளுவர், அம்பேத்கர், திராவிட இயக்க அறிஞர்களை பற்றி ஒருமையில் இழிவாகவும், அவதூறாகவும் பேசியுள்ளார். அவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் கடந்த இரு நாட்களாக வைரலாகி வந்தது. 



இவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர். மேலும், இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகவலைத்தளங்களில் புகார்களும் வந்தன. அவர் மீது சென்னை காவல்நிலையத்தில் புகார்களும் அளிக்கப்பட்டது. 

இந்நிலையில், சென்னை தெற்கு இணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் ஆர்.பி.வி.எஸ். மணியனை அவரது சென்னை மாம்பலத்தில் உள்ள வீட்டில் வைத்து கைது செய்தனர். இன்று அதிகாலை 3.30 மணி அளவில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.