சென்னையில் டிரெய்னைப் பிடிச்சா.. ஜஸ்ட் 4 மணி நேரம்தான்.. பெங்களூரு போய்ரலாம்!

Su.tha Arivalagan
Aug 19, 2023,09:59 AM IST
சென்னை: சென்னை டூ பெங்களூர் இடையிலான எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம் 4 மணி நேரமாக குறைக்கப்படவுள்ளது. மேலும் சில ரயில்களின் பயண நேரமும் சுமார் 20 நிமிடங்கள் வரை குறையப்போகிறது.

சென்னை - ஜோலார்பேட்டை இடையிலான விரைவு ரயிலின் வேகம் மணிக்கு 110 கிலோமீட்டர் இருந்து 130 கிலோ மீட்டராக அதிகரிக்கப்படுகிறது.  இந்த வழித்தடத்தில், தண்டவாளங்கள் மற்றும் சிக்னல்கள் சீரமைக்கப்பட்டதால் தெற்கு ரயில்வே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதேபோல அரக்கோணம் -ஜோலார்பேட்டை இடையிலான பயண நேரமும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

   

இந்த வழித்தடங்களின் பயண நேரம் குறைப்பால் சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் அனைத்து ரயில்களின் பயண நேரமும் 4.25 மணி நேரமாகவும் , ஆகவும் வந்தே பாரத் ரயிலின் பயண நேரம் 4 மணி நேரமாகவும் குறையும். பெங்களூரு மட்டுமல்லாமல், இந்த மார்க்கத்தில் கோவை ,கொச்சி ,திருவனந்தபுரம், கோழிக்கோடு ,மும்பை போன்ற பெரிய நகரங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களின் பயண நேரமும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ரயிலின் பயண நேரம் குறைவதால் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இனி ஆம்னி பஸ்களை விட வேகமான முறையில் நாம் பெங்களூரு உள்ளிட்ட ஊர்களைச் சென்றடைய முடியும் என்பதோடு பயணச் சோர்வும் வெகுவாக குறையும்.