சாமானிய மக்களுக்கு வழக்கம்போல ஏமாற்றத்தையே பரிசளித்திருக்கிறது திமுக : பாஜக தலைவர் அண்ணாமலை
சென்னை: இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் பட்ஜெட் சாமானிய மக்களுக்கு நான்காவது ஆண்டாக, வழக்கம்போல ஏமாற்றத்தையே பரிசளித்திருக்கிறது திமுக என்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2025-26ம் ஆண்டிற்கான பட்ஜெட் இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2வது முறையாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார். இன்று அறிவிக்கப்பட்ட பட்ஜெட் குறித்து பல்வேறு கட்சியினர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்றை பட்ஜெட் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட எக்ஸ் தள பதிவில்,
இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் பட்ஜெட்டைக் குறித்துச் சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால்,
தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது.
தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது.
ஒதுக்கீடுகள் இல்லாத விளம்பர அறிவிப்புகள் உயர்ந்துள்ளது.
திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆனால், சாமானிய மக்களுக்கு நான்காவது ஆண்டாக, வழக்கம்போல ஏமாற்றத்தையே பரிசளித்திருக்கிறது திமுக என்று தெரிவித்துள்ளார்.