பிக்பாஸ் தமிழ் 8 : 18 போட்டியாளர்களும் அறிமுகம்.. வீட்டுக்கு நடுவே கோடு போட்டு.. கலகல ஆரம்பம்!

Aadmika
Oct 06, 2024,11:45 PM IST

சென்னை : விஜய் டிவி.,யின் பிக்பாஸ் தமிழ் சீசன் 8ன் போட்டியாளர்கள் அனைவரும், அதாவது 18  பேரும் அறிமுகமாகி விட்டனர். பிக் பாஸ் சீசன் 8 அதிகாரப்பூர்வமாக தொடங்கி விட்டது.


போட்டியாளர்கள் விவரம்: ரவீந்திரன், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, நடிகர் தீபக், ஆர்ஜே ஆனந்தி அய்யப்பன், சுனிதா கோகாய், ஜெப்ரி, நடிகர் ரஞ்சித், பவித்ரா ஜனனி, செளந்தர்யா நஞ்சுண்டன், நடிகர் அருண், தர்ஷிகா, விஜே விஷால், அன்ஷிதா, அர்னவ், முத்துக்குமரன், தொகுப்பாளினி ஜாக்குலின் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.




இந்த சீசன் ஆண் - பெண் இடையிலான போட்டியாக இருக்கும் என்று பிக் பாஸ் கூறி விட்டார். அதேசமயம், வீட்டிலும் இரண்டு பிரிவாக பிரிய வேண்டும் என்று போட்டியாளர்களுக்கு அவர் கூறியுள்ளார். ஆனால் போட்டியாளர்கள் தங்களுக்கான பகுதியைத் தேர்வு செய்வதில் தாமதம் செய்து வருவதால், தற்போது அவர்களுக்கு பிக்பாஸ் ஒரு செக் வைத்துள்ளார். போட்டியின் முதல் நாளே இதனால் சுவாரஸ்யமாகியுள்ளது. சரி போட்டியாளர்கள் குறித்த விவரத்தைப் பார்ப்போம்.


ஜாக்குலின்




பிக் பாஸ் போட்டியின் 18வது போட்டியாளராக ஜாக்குலின் பங்கேற்றுள்ளார். விஜய் டிவியில் தொகுப்பாளியானா இவர் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். 


முத்துக்குமரன்




முத்துக்குமரன் 17வது போட்டியாளராக அறிமுகமாகியுள்ளார். சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊரைச் சேர்ந்தவர்.  புத்தக வாசிப்பை தனது தாயார் மூலமாக கற்றுக் கொண்டு சுயம்புவாக வளர்ந்தவர் முத்துக்குமரன். பேச்சை முதன்மையாக கையில் எடுத்தவர் முத்துக்குமரன். வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட், ஆங்கர் என்று வளர்ந்தவர் விஜய் டிவியிழ் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர். தனது வளர்ச்சிக்கான பெரிய மேடையாக தற்போது பிக் பாஸுக்கு வந்துள்ளார்.


நடிகர் அர்ணவ்




செல்லமா சீரியல் மூலம் பிரபலமான நடிகர் அர்ணவ் கடைசி போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார். நடிகை அன்ஷிதாவுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டவர் அர்ணவ். தற்போது அன்ஷிதாவும் இந்தப் பிக் பாஸ் போட்டியில் பங்கேற்றுள்ளார். அதேபோல அர்ணவும் பங்கேறுள்ளார் என்பதால் போட்டி களை கட்டும் என்று தெரிகிறது.


அன்ஷிதா




கேரளத்து அன்ஷிதா, செல்லம்மா சீரியல் மூலம் தமிழ்நாட்டில் பிரபலமானவர். தனக்கு எப்போதும் மிக முக்கியப் பங்கு வகிப்பவர்கள் தோழிகள்தான் என்று கூறியுள்ள அன்ஷிதா, தனது தாயார்தான் தனக்குப் பெரும் பலம் என்று கூறியுள்ளார்.


விஜே விஷால்




14வது போட்டியாளராக வந்துள்ளார் விஜே விஷால். செல்லப்பிள்ளை எழில் என்ற செல்லப் பெயர் கொண்ட விஷால் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் பிரபலமானவர். இன்ஸ்டாகிராமில் பெரிய பாலோயர் கூட்டம் உள்ளது இவருக்கு. திரைப்படங்களில் சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் இருப்பதாக கூறியுள்ளார் விஷால்.


தர்ஷிகா




பிக் பாஸ் வீட்டின் 13வது போட்டியாளராக வந்துள்ளார் தர்ஷிகா. இவர் சீரியல் நடிகையாக வலம் வருபவர். மிகுந்த தன்னம்பிக்கையுடன் இந்தப் போட்டிக்கு வந்துள்ளதாகவும், தான் சிங்கப் பெண் என்றும் தர்ஷிகா, விஜய் சேதுபதியிடம் கூறினார்.


செளந்தர்யா நஞ்சுண்டன்




பிக் பாஸ் போட்டியில் புதிய போட்டியாளராக வருகை தந்துள்ளார் செளந்தர்யா நஞ்சுண்டன். வேற மாறி ஆபீஸ் வெப் சீரிஸில் இவர் நடித்துள்ளார். மாடலிங்கிலும் கலக்கியவர் செளந்தர்யா. காலங்களில் அவள் வசந்தம், திரவுபதி, தர்பார், ஆதித்யா வர்மா ஆகிய ஷோக்களிலும் இவர் பங்கேற்றுள்ளார்.



பாரதி கண்ணம்மா அருண்




பாரதி கண்ணமா தொடரில் கலக்கியவர் நடிகர் அருண். இந்தத் தொடர் இவருக்கு மிகப் பெரிய பெயரைப் பெற்றுக் கொடுத்தது. இந்த பிக் பாஸ் மூலம் புதிய திருப்பத்திற்காக வந்துள்ளதாக தெரிவித்துள்ளார் அருண்.


பவித்ரா ஜனனி




சின்னத்திரை நடிகை பவித்ரா ஜனனி பிக் பாஸ் போட்டியாளராக வந்துள்ளார். கூட்டத்தில் ஒரு ஆளாக நடித்து வந்த நான் இப்போது ஹீரோயினாக நடிப்பது பெருமையாக இருக்கிறது. இப்போது பிக்பாஸ் மூலமாக என்னை மேலும் நிரூபிக்க நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என்று பவித்ரா கூறியுள்ளார்.


நடிகர் ரஞ்சித் வருகை




ஹீரோவாக அறிமுகமாகி பின்னர் வில்லனாக மாறி, பிறகு குணச்சித்திர வேடங்களிலும் நடித்து, சின்னத் திரையிலும் நடிகராக அறிமுகமாக, சமீபத்தில் கவுண்டம்பாளையம் படம் மூலமாக பரபரப்பையும் ஏற்படுத்திய நடிகர் ரஞ்சித் பிக் பாஸ் போட்டியில் பங்கேற்கிறார். ரஞ்சித்தை வரவேற்ற விஜய் சேதுபதி அவரது சமீப கால சர்ச்சைகள் குறித்து பளிச்சென கேட்டு அதிர வைத்தார்.


சுனிதா கோகாய்




அஸ்ஸாமைப் பூர்வீகமாகக் கொண்டு, தமிழில் கலக்கிக் கொண்டிருக்கும் சுனிதா கோகாய் அடுத்த போட்டியாளராக வந்துள்ளார். இவர் குக் வித் கோமாளி மூலம் பிரபலமானவர் என்பது நினைவிருக்கலாம்.


ஜெப்ரி




கானா பாடகர் ஜெப்ரி புதிய போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்கு வந்துள்ளார். சுயமாக பாட்டுக் கற்றுக் கொண்ட ஜெப்ரி, தனது தாயாரிடமிருந்து பாடல் கற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார். மெலடி பாடல்களில் தொடங்கி கானா பாடலுக்கு மாறியவர் ஜெப்ரி. இப்போது முழு நேர கானா பாடகராக வலம் வருகிறார் ஜெப்ரி.


ஆர்ஜே ஆனந்தி அய்யப்பன்




ஆர்ஜே ஆனந்தி அய்யப்பன், புதிய போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்கு வந்துள்ளார். ஆர்ஜேவாக மட்டுமல்லாமல் சிறந்த வாசிப்பாளராகவும் திகழ்பவர் ஆனந்தி.


நடிகர் தீபக்




சின்னத்திரை நடிகர் தீபக் பிக் பாஸ் வீட்டுக்கு போட்டியாளராக வந்துள்ளார். மாடல், ஆங்கர் என்று பல்வேறு ரோல்களைச் செய்துள்ளார் தீபக். பல்வேறு சீரியல்களில் ஹீரோவாக நடித்துள்ளார் தீபக். சினிமாவிலும் அவர் அறிமுகம் ஆனார். ஆனால் சின்னத்திரையில் சாதித்தது போல சினிமாவில் சாதிக்க முடியவில்லை. நான் உங்கள் முன்னாடி சாதாரண தீபக்காக இருக்கப் போகிறேன். இதற்காகவே பிக் பாஸ் வீட்டுக்கு வந்துள்ளேன் என்று கூறினார் நடிகர் தீபக்.


சத்யா




பின்னணிப் பாடகி ரம்யாவின் கணவரான சத்யா 4வது போட்டியாளராக களத்திற்கு வந்துள்ளார். பாடகி ரம்யா 2வது சீசன் பிக் பாஸ் தொடரில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தர்ஷா குப்தா




குக் வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தா 3வது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்கு வந்துள்ளார். இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் மூலம் பிரபலமான தர்ஷா குப்தா, கோயம்பத்தூர் பொண்ணு ஆவார். நான் ரொம்பப் பேசுவேன், ஜாலியான கேரக்டர், பாசிட்டிவிட்டியை பரப்ப விரும்புவேன் என்று கூறும் தர்ஷா குப்தா, தான் டீச்சராக இருந்ததாகவும் கூறினார். சீரியலில் ஹீரோயினாக நடித்து நடிப்பில் அறிமுகமானதாக கூறிய தர்ஷா குப்தா, அதில் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்த அவர், கொரோனா ஊரடங்கு காலத்தில்  தினசரி 6 மணிக்கு இன்ஸ்டாகிராமில் புகைப்படம் போட்டு பிரபலமானார். அதன் பிறகு குக் வித் கோமாளியில் பங்கேற்று மேலும் புகழ் பெற்றார். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் நாட்கள் முழுவதும், பாசிட்டிவிட்டியை பரப்பப் போவதாகவும் தர்ஷா குப்தா கூறினார்.


மகாராஜா படப் புகழ் சாச்சனா 




2வது  போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்கு வந்துள்ளார் நடிகை சாச்சனா. இவர் வேறு யாருமல்ல, விஜய் சேதுபதி நடித்து சூப்பர் ஹிட் ஆன மகாராஜா படத்தில் அவருடைய மகளாக நடித்த பெண்தான். 21 வயதான சாச்சனா, தனது தாயாரின் கனவை நிறைவேற்றுவதற்காக தான் பிக் பாஸ் போட்டிக்கு வந்திருப்பதாக தெரிவித்தார். சாச்சனா விஜய் சேதுபதி அறிமுகப்படுத்தியபோது ஆடியன்ஸிலிருந்து ஒருவர் உற்சாகமாக குரல் கொடுக்க, அவரைப் பார்த்த விஜய் சேதுபதி, டேய் அப்பா இருக்கும்போதே பொண்ணை கூப்பிடறியா நீ என்று ஜாலியாக கலாய்த்தார். நான் நானாக இருந்து போட்டியில் பங்கேற்பேன் என்று கூறியுள்ளார் சாச்சனா.


தயாரிப்பாளர் ரவீந்திரன்




முதல் போட்டியாளராக தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர் வந்துள்ளார். நடிகை மகாலட்சுமியைத் திருமணம் செய்ததன் மூலம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியவர். அதற்கு முன்பு தயாரிப்பாளராக வலம் வந்தவர். பிக் பாஸ் நிகழ்ச்சிகளை விமர்சனம் செய்தும் பரபரப்பைக் கிளப்பியவர். முதல் ஆளாக ரவீந்திரனை வரவேற்றார் விஜய் சேதுபதி. இந்த நிகழ்ச்சியில் நான் நானாக இருப்பேன். மற்றபடி நான் அதைச் செய்யப் போகிறேன், இதைச் செய்யப் போகிறேன் என்றெல்லாம் சொல்ல மாட்டேன் என்று கூறினார் ரவீந்திரன்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்