ஆசியக் கோப்பை கிரிக்கெட்: முதல் போட்டியில் பாகிஸ்தான் - நேபாளம் மோதல்

Aadmika
Aug 30, 2023,01:14 PM IST

இஸ்லாமாபாத் : ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்று (ஆகஸ்ட் 30) பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் மோத உள்ளன.


ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் பாகிஸ்தானில் இன்று துவங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் உள்ளிட்ட 6 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. 




இதில் ஏ குரூப்பில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் உள்ளன. அதேபோல பி குரூப்பில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.


ஆகஸ்ட் 30ம் தேதி முதல் செப்டம்பர் 5ம் தேதி வரை குரூப் பிரிவு போட்டிகள் நடைபெறும். இதில் இந்தியா மோதும் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடைபெறும். இந்தியாவின் முதல் போட்டி செப்டம்பர் 2ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரானதாகும். கண்டியில் இப்போட்டி நடைபெறவுள்ளது. 2வது போட்டி நேபாளத்துடன் செப்டம்பர் 4ம் தேதி நடைபெறும்.


தொடக்கப் போட்டிகளைத் தொடர்ந்து சூப்பர் 4 ஸ்டேஜ் போட்டிகள் செப்டம்பர் 6ம் தேதி முதல்  16ம் தேதி வரை நடைபெறும்.  இறுதிப் போட்டி செப்டம்பர் 17ம் தேதி நடைபெறும்.


இன்று துவங்கும் முதல் போட்டி பாகிஸ்தானில் உள்ள முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. மாலை 3 மணிக்கு துவங்கும் இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் மோத உள்ளன.