"வலிக்குதாண்ணா".. காயமடைந்த நிர்வாகியின்.. காலைத் தொட்டு நலம் விசாரித்த அண்ணாமலை!

Su.tha Arivalagan
Jan 21, 2023,02:14 PM IST
கடலூர்: கடலூர் சென்ற தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, காயமடைந்த பாஜக நிர்வாகியின் காலைத் தொட்டுப் பார்த்து நலம் விசாரித்த செயல் அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.



தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியில் ஆக்ரோஷமாகவும், ஆவேசமாகவும், அனல் பறக்கவும் காணப்பட்டாலும் கூட கட்சியினரிடம் காட்டும் கனிவு அவர்களை நெகிழ வைத்து வருகிறது. தொண்டர்களின் தலைவனாக தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதில் அண்ணாமலையும் ஆர்வம் காட்டுகிறார்.

கட்சியினரைத் தேடித் தேடிப் போகிறார். நிர்வாகிகளின் வீடுகளில் சாப்பிடுகிறார். இந்த நிலையில் கடலூர் சென்றிருந்த அண்ணாமலை,  அங்கு மார்க்கெட் காலனி 28வது வார்டு உறுப்பினர் சக்திவேல் வீட்டுக்குச் சென்றார். அவருக்குக் காலில் காயம் ஏற்பட்டு கட்டுடன் இருப்பதை அறிந்து சென்றார்.

சக்திவேல் வீட்டுக்குச் சென்ற அவர் அவரது காலைத் தொட்டுப் பார்த்து இப்ப எப்படி இருக்குண்ணா என்று கேட்டு நலம் விசாரித்தார். இதைப் பார்த்து தொண்டர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அண்ணாமலை போட்டுள்ள டிவீட்டில், சக்திவேல் அவர்கள், காலில் காயமடைந்த செய்தி அறிந்து, இன்று அவரது இல்லத்திற்குச் சென்று நலம் விசாரித்தேன். அவர் விரைவில் முழுமையான உடல் நலன் பெற்று, மக்கள் பணி தொடர வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.