உயிருக்கு அச்சுறுத்தல்... அண்ணாமலைக்கு விரைவில் இசட் பிரிவு பாதுகாப்பு

Su.tha Arivalagan
Jan 13, 2023,02:52 PM IST
சென்னை: அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.



தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலைக்கு ஏற்கனவே ஒய் பிரிவு பாதுகாப்பு உள்ளது. இந்த நிலையில் அவரது பாதுகாப்பை மேம்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம். அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு தரப்படலாம் என்று தெரிகிறது.

அண்ணாமலை மிக் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அனல் கக்கப் பேசுகிறார். இதனால் அவருக்கு பாதுகாப்பு மிரட்டல்கள் ஏற்படலாம் என்று மத்திய அரசு அஞ்சுகிறதாம். தொடர்ந்து அவர் வேகம் காட்டி செயல்பட்டு வருவதால் அவரது பாதுகாப்பை இசட் பிரிவுக்கு தரம் உயர்த்தப் போகிறார்களாம்.

இதனால் ஆயுதம் தாங்கிய கமாண்டோக்கள் புடை சூழ இனி அண்ணாமலை வலம் வருவார் என்று தெரிகிறது. தமிழ்நாட்டில் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு மட்டும்தான் இசட் பிரிவு பாதுகாப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.