சென்னையில் 2 தொகுதிகள்.. 16 வேட்பாளர்கள் கொண்ட.. பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிச்சாமி

Manjula Devi
Mar 20, 2024,06:31 PM IST

சென்னை: லோக்சபா தேர்தலுக்கான 16 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை இன்று அறிவித்தார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.


தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்க உள்ள ‌நிலையில், விறுவிறுப்பான தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல்கள் வெளியாக ஆரம்பித்துள்ளது.


இன்று அதிமுக கூட்டணி தெளிவாகி விட்டது. தேமுதிகவுக்கு 5 தொகுதிகளும், புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். மேலும் 16 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலையும் அவர் வெளியிட்டார்.




வடசென்னை  - ராயபுரம் மனோ , தென் சென்னை- ஜெயவர்தன், காஞ்சிபுரம் (தனி) - ராஜசேகர், அரக்கோணம்  - விஜயன், கிருஷ்ணகிரி - ஜெயபிரகாஷ், விழுப்புரம் (தனி) - பாக்யராஜ், சேலம்- விக்னேஷ்,  நாமக்கல் -தமிழ்மணி, ஈரோடு - ஆற்றல் அசோக், கரூர் -கே.ஆர்.என்.தங்கவேல், சிதம்பரம் (தனி) - சந்திரகாசன், மதுரை - டாக்டர் சரவணன் தேனி- நாராயணசாமி, ஆரணி - ஜி.வி.கஜேந்திரன், நாகப்பட்டனம் (தனி) - டாக்டர் கர்சித் சங்கர், ராமநாதபுரம் - ஜெயபெருமாள்