எங்கோ ஒரு நாள் .. ஒரு நடை பயணத்தில் .. உன் விரல் கோர்த்து கொண்டு ..!

Su.tha Arivalagan
Dec 19, 2024,04:36 PM IST

- ராஜ் பிரியன்




விடியலுடன் பூக்களிடம் வன்முறையில் ஈடுபட்டுவிட்டேன்...

என்னவளின் கூந்தலுக்கு அழகு சேர்க்க சொல்லி 

ம்ம்ம்...! 

கொடுமைக்காரன் போல் 

ஒரு மொட்டுகளைக் கூட விட்டு வைக்கவில்லையே...

அத்தனையும் அவளுக்கே சொந்தமாகட்டும்

எங்கோ ஒரு நாள் 

ஒரு நடை பயணத்தில் 

உன் விரல் கோர்த்து கொண்டு 

நம் மௌனங்கள் மட்டும் பேசிக்கொண்டிருக்க 

என் நிழலில் நீயும்

உன் நிழலில் நானும் 

நடந்து செல்லும் ஒரு சில நிமிடங்கள் 

அங்கே எனக்கான வாழ்வு முழுமை பெற

அப்போதே இறந்தாலும் சந்தோசம் தான்.

சட்டென்று நீ படும் சிறு கோபமும் 

புன்னகைக்கும் படியே நான் ரசிக்கிறேன்

அதை தவறு என்று நான் உணரும் வரை 

நீ படும் கோபத்தில் 

உன்னை கெஞ்சுவதை காட்டிலும் 

கொஞ்சம் கொஞ்சமாக கொஞ்சுவதையே நான் விரும்புகிறேன்

நீ எத்தனை முறை கோபம் கொண்டாலும்



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்