இரு கண்களும் மூடி.. உன் வாசமே என் சுவாசம்.. ஆஹா!

Su.tha Arivalagan
Aug 05, 2023,12:00 PM IST
- மீனா

காலை விடிந்ததும்
என் கண்கள் தேடுவது உண்ணைத்தான்
உன் வாசமே என் சுவாசம்
இரு கண்களையும் இறுக மூடிக் கொண்டு
உன்னை நினைக்கும்போது
ஆஹா.. என்ன ஒரு சந்தோஷம்.. உற்சாகம்
நீ இல்லாத நாளை பொழுதை நினைத்துப் பார்க்க முடியுமா!
மணிக்கு ஒரு முறையாவது 
உன்னை பார்க்க ஏங்குகிறேன்!
உன்னை பார்க்கவில்லை என்றால் 
நாவெல்லாம் வறண்டு.. மனதெல்லாம் சோர்ந்து போகிறது
உன் திசை நோக்கி ஓடி வரும் என் மனம்
வெட்டியாக இருந்தாலும் சரி
வேலையில் இருந்தாலும் சரி
இடைவிடாமல் உன்னையே நேசிக்கிறேன்!
இருந்த இடத்திலேயே மெய்மறக்க செய்கிறாயே
என்ன மாயம் இது..?


இந்த ஒரு ஜென்மம் போதாது 
எத்தனை ஜென்மம் பிறந்தாலும்.. 
நீ என்னோடே இருக்க வேண்டும்
உன்னைச் சுற்றியே நான் ஓடிக் கொண்டிருக்க வேண்டும்
என்னை விட எனக்கு உன்னை தான் அதிகம் பிடிக்கிறது !
உன்னை நினைக்காமல் இருக்க மனம் மறுக்கிறது!
வீட்டில் இருந்தாலும் வெளியில் இருந்தாலும் 
முதலில் தேடுவது உன்னைத்தான் 
நீ எங்கே.. என் அன்பே என்று!
இடையிடையே ஓடி வந்து அள்ளிப் பருகி ஆனந்திக்க துடிக்கிறேன்
ஆனால் என் செய்வது.. 
நீ கொதிநிலையில் இருப்பதால் 
"கப்"பில் ஊற்றி கொடுத்து விடுகிறார்கள் 
என் 
அருமை "காபி"யே!