மகளிர் பிரீமியர் லீக்...முதல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி

Aadmika
Mar 27, 2023,10:15 AM IST
மும்பை : மகளிருக்கான முதல் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் கடைசி நிமிடம் வரை பரபரப்பான சென்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று, கோப்பையை கைப்பற்றி உள்ளது.

மகளிருக்கான ப்ரீமியர் லீக் டுவென்டி - 20 கிரிக்கெட் போட்டியின் மும்பை அணியும், டில்லி அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த டில்லி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 131 ரன்கள் எடுத்தது. 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்கள் பறி போகின.



பிறகு சுதாரித்து ஆகிய மும்பை அணியில், கடைசி ஓவர் வரை திக் திக் நிமிடங்களாகவே இருந்தது. மிகவும் விறுவிறுப்பாகவும் திகிலாகவும் நடைபெற்ற இந்த போட்டியில் கடைசி கடைசி நிமிடத்தில் மும்பை அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது. மகளிருக்கான முதல் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் முதல் சாம்பியன் பட்டத்தை மும்பை அணி பெற்றுள்ளது.