ரஜினியின் "தலைவர் 170" படத்தின் கதை இது தானா.. இவர்தான் வில்லனா??

Aadmika
May 22, 2023,12:17 PM IST

சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 170வது படத்தின் கதை குறித்து இப்போதே பேச ஆரம்பித்து விட்டனர்.

ரஜினி தற்போது அடுத்த படங்களுக்கு தயாராகி பிஸியாக நடித்து வருகிறார். ஜெயிலர் படத்தின் ஷூட்டிங்கை முடித்த கையோடு தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் நடிக்க துவங்கி விட்டார். விஷ்ணு விஷால், விக்ராந்த் லீட் ரோலில் நடிக்கும் இந்த படத்தில் மெய்தீன் பாய் என்ற இஸ்லாமியர் ரோலில் நடிக்கிறார் ரஜினி.



கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்ட இந்த படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவும் நடிக்கிறார். ரஜினி - கபில்தேவ் சந்தித்த பிடிஎஸ் போட்டோக்களை ஐஸ்வர்யா சமீபத்தில் வெளியிட்டார். இது செம வைரலானது. லால் சலாம் படத்தில் ரஜினி தனது பகுதிகளை இன்னும் இரண்டு வாரங்களில் நடித்து முடிக்க போக���றாராம்.


அதைத் தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிப்பில், டி.ஜே.ஞானவேல் இயக்கும் பிரம்மாண்ட படமான தலைவர் 170 படத்தின் ஷூட்டிங் பங்கேற்ற போகிறார் ரஜினி. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க நடிகர் விக்ரமிடம் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு விக்ரம் நோ சொல்லி விட்டதாகவும், இருந்தாலும் தொடர்ந்து அவரை நடிக்க வைக்கும் முயற்சி நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் ரஜினியின் தலைவர் 170 படத்தின் கதை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய தகவலின் படி, தலைவர் 170 படத்தில் ரிட்டயர்டு போலீஸ் அதிகாரி ரோலில் தான் ரஜினி நடிக்க போகிறாராம். போலி என்கவுன்ட்டர் பற்றிய கதையாம் இது. இந்த போலி என்கவுன்ட்டர் முறையை எதிர்த்து ஹீரோ போராடுவது தான் கதையாம். 

டி.ஜே.ஞானவேல் ஏற்கனவே இதே போன்று நிஜ வாழ்க்கையில் நடந்த கதையை தான் ஜெய்பீம் படமாக இயக்கினார். இவர் தனது படங்களில் முக்கியமான சமூக பிரச்சனைகளை கையில் எடுத்து, அதை படமாக்கக் கூடியவர். ஆனால் இது தான் படத்தின் கதை என்பது உண்மை தானா என்பதை ஜூலையில் தலைவர் 170 பட ஷூட்டிங் துவங்கும் வரை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.