ஐபிஎல் முடிஞ்சிடுச்சு.. அடுத்து என்ன?.. டிஎன்பிஎல் 2023 தான்.. வாங்க பார்க்கலாம்!

Su.tha Arivalagan
Jun 04, 2023,12:59 PM IST
சென்னை :  ஐபிஎல் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் அடுத்த விருந்துக்கு கிரிக்கெட் ரசிகர்கள் தயாராகி விட்டார்கள். தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் ஜூன் 12ம் தேதி தொடங்கவுள்ளன.

கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வந்த இந்தியன் பிரீமியர் லீக் 2023 சமீபத்தில் முடிவடைந்தது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றது.  இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5வது ஐபிஎல் கோப்பையாகும். மும்பை அணியின் 5 கோப்பை சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் சமன் செய்துள்ளது.




ஐபிஎல் திருவிழா முடிந்து விட்டதால் அடுத்து என்ன என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் விதமாக தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் 2023 போட்டிகள் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

டிஎன்பிஎல் 2023 டுவென்டி 20 கிரிக்கெட் போட்டிகள் தமிழ்நாடு கிரிக்கெட் அசோஷியேஷனால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஏழாவது சீசன் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் ஜூன் 12 ம் தேதி துவங்கி ஜூலை 12 ம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 32 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் கோவை, திருப்பூர், நெல்லை, திண்டுக்கல் சேலம் உள்ளிட்ட 8 அணிகள் மோத உள்ளன. 

தோனி காலைத் தொட்டு வணங்கிய உத்கர்ஷா.. ஹேப்பியாக தாலி கட்டிய ருத்துராஜ் கெய்க்வாட்!

ஜூன் 12 ம் தேதி கோவை எஸ்என்ஆர் காலேஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியும், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோத உள்ளன. கோவை, திண்டுக்கல், சேலம், நெல்லை ஆகிய நகரங்களில் இந்த போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த போட்டிகளுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.