குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை! தமிழக பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட புதிய அறிவிப்புக்கள

Aadmika
Mar 20, 2023,12:18 PM IST
சென்னை : 2023- 2024 ஆம் நிதியாண்டிற்கான தமிழக அரசின் பட்ஜெட், தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் உரையை தாக்கல் செய்த தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பல புதிய திட்டங்களுக்கான அறிவிப்புக்களை வெளியிட்டார். அவற்றின் முழு விபங்களை இங்கே பார்க்கலாம்.




தமிழக பட்ஜெட் வெளியிடப்பட்ட புதிய அறிவிப்புக்கள் :

* கிண்டியில் கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை

* பள்ளிவாசல், தேவாலயங்களை புதுப்பிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு

* ரூ.485 கோடி மதிப்பீட்டில் பழனி, திருத்தணி, சமயபுரம் ஆகிய திருக்கோயிலில் பெரும் திட்டங்கள்.

* ஈரோடு, திருநெல்வேலி, செங்கல்பட்டில் மினி டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள்

* சென்னை, ஆவடி, தாம்பரம், கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளில் முக்கிய இடங்களில் இலவச வைஃபை வசதி.

* தகவல் தொழில்நுட்பத்தின் புரட்சியாக சென்னை, கோடை, ஓசூரில் TnTech City.

* புதிதாக ஒரு லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும்.

* அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் வீடுகட்டும் முன்பணம் ரூ.40 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தப்படும்.

* ரூ.800 கோடி மதிப்பீட்டில் சேலத்தில் 119 ஏக்கர் பரப்பளவில் புதிய ஜவுளிப் பூங்கா.

* அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ம் தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும்.

* மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.30,000 கோடி ஒதுக்கீடு.

* கோவையில் ரூ.172 கோடியில் செம்மொழி பூங்கா.

* ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாதம் ரூ.7500 உதவித்தொகை.

* மதுரை ஒத்தக்கடை - திருமங்கலம் இடையே மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.8500 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம்.

* கோவை அவிநாசி - சத்தியம���்கலம் ரூ.9000 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம்

* சென்னை அண்ணாசாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை மேம்பாலம் அமைக்கப்படும்.

* நகர்புற உள்ளாட்சிகளில் 1424 கி.மீ., மண்சாலைகள் தரமான சாலைகளாக மேம்படுத்தப்படும்.