தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Aadmika
Jun 24, 2023,02:35 PM IST
சென்னை : தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி உள்ளிட்டஐந்து மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெப்ப சலமனம் மற்றும் காற்றழுத்தம் காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக பல மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் இரவு நேரங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இரவு நேரங்களில் மட்டும் மழை பெய்வது, பகலில் சாதாரணமான அளவிலேயே வெயில் அடிப்பதுமாக உள்ளதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



இந்நிலையில் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மாலை வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும், மற்ற பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.