நாளை சூரிய புயல் பூமியை தாக்குமா?.. பகீர் கிளப்பும் நாசா

Aadmika
Jul 12, 2023,11:17 AM IST
நியூயார்க் : ஜூலை 13 ம் தேதியான நாளை சூரிய புயல் பூமியை தாக்கலாம் என நாசா எச்சரித்துள்ளது. இது பூமியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த சூரிய புயலால் வளி மண்டல அடுக்கில் மிகப் பெரிய தாக்கம் ஏற்படலாம் என்றும், வட அமெரிக்காவின் பல பகுதிகள் இந்த சூரிய புயலால் பாதிக்கப்படலாம் என்றும் நாசா தெரிவித்துள்ளது. மைனரான ஜி1 புவிகாந்த புயலும் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஸ்பேஸ் வெதர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் புவியில் காந்தவியல் தன்மையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவம் சொல்லப்படுகிறது. 



அமெரிக்காவின் வாஷிங்டன், அலாஸ்கா, நியூயார்க், மிச்சிகன், இண்டியானா, மெரிலாந்து உள்ளிட்ட 13 அமெரிக்க மாகாணங்களில் இந்த சூரிய புயலை உணர முடியும். இதனால் அமெரிக்காவில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இணையதள சேவையில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அஞ்சப்படுகிறது. அது மட்டுமல்ல எலக்ட்ரானிக் மின்னணு சாதனங்களும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்படுகிறது.

இந்த சூரிய புயலின் தாக்கம் அமெரிக்கா தவிர வேறு எந்தெந்த நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றி நாசா எந்த தகவலையும் வெளியிடவில்லை. இது வளிமண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் காற்றின் தன்மைகளில் மாறுபாடு ஏற்படலாம். அதோடு பூமியின் கிழடுக்கு நீள்வட்ட பாதையில் இருக்கும் செயற்கைக் கோள்களையும் இது பாதிக்கும் என சொல்லப்படுகிறது.