இந்த வருடத்தின் "சிறந்த கவர்னர்" சக்திகாந்த தாஸ்.. புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி!

Su.tha Arivalagan
Mar 17, 2023,12:19 PM IST
டெல்லி: மத்திய வங்கிகள் விருது 2023ல் முக்கிய அம்சமாக, இந்த வருடத்தின் சிறந்த கவர்னர் விருது, ரிசர்வ்  வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸுக்கு வழங்கப்படுகிறது.

இது நாட்டுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் பெருமையான தருணம் என்று பிரதமர் நரேந்திரமோடி புகழாரம் சூட்டியுள்ளார். புதன்கிழமை விருது அறிவிக்கப்பட்டது. கோவிட் பெருந்தொற்றுக்காலம், உக்ரைன் போர் என பொருளாதார சூழலுக்கு எதிரான கடும் நெருக்கடியான காலகட்டத்தில், இந்தியாவின் நிதிச் சந்தைகளை ஸ்திரப்படுத்தி, சீராக வழிநடத்தியமைக்காக சக்திகாந்த தாஸுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.




ரிசர்வ் வங்கி ஆளுநராக 2வது முறை பதவி நீட்டிப்பில் இருந்து வருகிறார்  சக்திகாந்த தாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019ம் ஆண்டு கொரோனாவின் பிடியில் நாடு சிக்கியிருந்தபோது ரிசர்வ் வங்கி ஆளுநராக அவர் நியமிக்கப்பட்டார். 

சக்திகாந்த தாஸுக்கு இந்த விருது கிடைத்திருப்பது குறித்து டிவீட் போட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இது பெருமைமிகு தருணம். சக்திகாந்த தாஸுக்கு எனது வாழ்த்துகள் என்று கூறி வாழ்த்தியுள்ளார்.