32 வயது காதலியை கொன்று.. துண்டுதுண்டாக வெட்டி.. வேக வைத்த 56 வயது கொடூரன்!

Su.tha Arivalagan
Jun 08, 2023,12:22 PM IST
மும்பை:  மும்பையில் 32 வயது லிவ் இன் பார்ட்னர் பெண்ணை கொலை செய்து துண்டு துண்டாக உடலை வெட்டி, குக்கரில் போட்டு வேக வைத்து அப்புறப்படுத்த முயன்ற 56 வயது நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மும்பை புறநகரில் உள்ளகீதா நகரில் உள்ள கீதா ஆகாஷ் தீப் அபார்ட்மென்ட் பகுதியில் வசித்து வருபவர் மனோஜ் சஹானி. 56 வயதாகும் இவர் கடநத் 3 வருடமாக இங்கு வசித்து வருகிறார்.  அவருடன் சரஸ்வதி வைத்யா என்ற பெண்ணும் வசித்து வந்தார். அப்பெண்ணுக்கு 32 வயதுதான் ஆகிறது. இருவரும் லிவ் இன் பார்ட்னர்களாக இருந்து வந்தனர்.



புதன்கிழமையன்று நயா நகர் போலீஸ் நிலையத்துக்கு இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தவர்களிடமிருந்து போன் வந்தது.  மனோஜ் வசிக்கும் வீட்டிலிருந்து துர்நாற்றம் வருவதாக அவர்கள் கூறினர். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து மனோஜ் சஹானி வீட்டில் சோதனை நடத்தினர். கதவை உடைத்து உள்ளே போய் பார்த்தபோது அங்கு ஒரு பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இருப்பதைப் பார்த்து அதிர்ந்தனர். சில உடல் பாகங்கள்  குக்கரில் வேக வைக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.

வீட்டிலிருந்து தப்ப முயன்ற மனோஜ் சஹானியை போலீஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.  கொல்லப்பட்டது சரஸ்வதிதான் என்று விசாரணையில் தெரிய வந்தது.  ஏன் கொலை செய்தார், எதற்காக உடல் பாகங்களை வெட்டினார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

மரம் வெட்டப் பயன்படுத்தும் கத்தியைக் கொண்டு உடலை வெட்டியுள்ளார் மனோஜ் சஹானி. உடல் பாகங்களில் சிலவற்றை அங்குள்ள நாய்களுக்கும் போட்டுள்ளார். கடந்த 2, 3 நாட்களாக நாய்களுக்கு உடல் பாகங்களைப் போட்டு வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்த ஜோடி அக்கம் பக்கத்தில் யாருடனும் பேசுவது கிடையாதாம்.  எனவே அவர்களைப் பற்றி யாருக்கும் அதிகம் தெரியவில்லை.