சிஎஸ்கே.,வுக்கு இப்படியா சோதனை வரணும்... அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

Aadmika
Apr 13, 2023,03:23 PM IST
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று நடைபெற்ற போட்டியில் பெற்ற தோல்வியின் அதிர்ச்சியில் இருந்தே ரசிகர்கள் இன்னும் மீளாத நிலையில், இன்று அடுத்த அதிர்ச்சி தகவலை அந்த டீம் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17 வது போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் மோதியது. இதில் சென்னை அணி கடைசி ஓவரில் 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இருந்தாலும் தோனி அடித்த 3 சிக்சர்கள், ஒரு பவுண்டரியே தங்களுக்கு ஆறுதலாக உள்ளது என ரசிகர்கள் மனதை தேற்றிக் கொண்டு உள்ளனர்.



இந்நிலையில் ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சி அளிப்பதாக சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்த 3 போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என்றும் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார். முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தோனி நடப்பதற்கு கூட சிரமப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமல்ல சென்னை அணியின் வேகப் பந்து வீச்சாளர் மகாலாவுக்கும் விரலில் காயம் ஏற்பட்டுள்ளதாக பிளெமிங் தெரிவித்துள்ளார். காயம் காரணமாக மகாலா, அடுத்த இரண்டு வாரங்களுக்கு விளையாட மாட்டார் எனவும் பயிற்சியாளர் பிளெமிங் தெரிவித்துள்ளார். சிஎஸ்கே அணிக்கு இப்படியா ஒரு சோதனை வர வேண்டும் என ரசிகர்கள் கடும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர்.