சென்னையில் மீண்டும் கன மழை.. பலத்த காற்றுடன் அடித்து விளாசியது!

Su.tha Arivalagan
Jun 22, 2023,03:31 PM IST
சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மீண்டும் ஒரு கன மழை வந்துள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கன மழை பெய்ததால் மக்கள் குஷியடைந்துள்ளனர்.

நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர், மந்தைவெளி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்றுடன்  மழை வெளுத்தெடுத்தது. இதேபோல திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, அண்ணா சாலை என நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.



புறநகர்ப் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சில நாட்களுக்கு முன்பு  மழை வெளுத்துக் கட்டி சென்னையின் உஷ்ணத்தை உறிஞ்சிப் போட்டுச் சென்றது. இதனால் வெட்கை தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் மழை நின்றதைத் தொடர்ந்து மீண்டும் வெயில் தலை காட்டியது.



காலையில் கூட சென்னையில் நன்றாக வெயில் அடித்தது. அடடா மறுபடியும் வெயிலா என்று மக்கள் மண்டை காய ஆரம்பித்த நிலையில் மாலையில் நிலைமை டக்கென தலைகீழாக மாறி மழையைக் கொண்டு வந்து மக்களின் மனதைக் குளிர வைத்து விட்டது.