மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா...அடுத்த 2 வாரங்களுக்கு கவனமா இருங்க

Aadmika
Apr 13, 2023,10:52 AM IST
புதுடில்லி : நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு கவனமாக இருக்கும் படி மருத்துவ நிபுணர்கள் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.

நாடு முழுவதும் ஒமைக்ரானின் உருமாறிய வடிவமான XBB.1.16 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் நேற்று 7000 என்ற அளவில் இருந்த தினசரி கொரோனா பாதிப்பு, இன்று 10,000 என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 44,998 ஆக அதிகரித்துள்ளது.  



கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும், கொரோனா தற்காப்பு நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் பொது மக்களை எச்சரித்துள்ளனர்.

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஊழிர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி ��ெய்யப்பட்டதை அடுத்து, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. மருத்துவமனைக்கு வருபவர்களும், மருத்துவமனை ஊழியர்களும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.