தமிழ்நாட்டை விட்டு.. கொரோனா கிட்டத்தட்ட ஓடியே போய்ருச்சு!

Su.tha Arivalagan
Jun 10, 2023,09:48 AM IST
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டது. கொரோனா பாசிட்டிவிட்டி சதவீதம் பூஜ்யத்துக்கு வந்து விட்டது. 

தமிழ்நாட்டில் நேற்று புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர்கள் 5 பேர் மட்டுமே. தமிழ்நாட்டில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருபவர்கள் 23 பேர்.



வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டில் மொத்தம் 3365 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டதில்,5 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.  கோவை, சென்னை, தூத்துக்குடியில் மொத்தம் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. 5 பேர் நேற்று குணமடைந்தனர்.  இதுவரை கொரோனாவிலிருந்து 35 லட்சத்து 72 ஆயிரத்து 434 பேர் குணமடைந்துள்ளனர்.  புதிதாக கொரோனா பலி எதுவும் பதிவாகவில்லை. தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 38,080 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர்.