சென்னையில் பெண்களால் இயக்கப்படும் ரேபிடோ பைக் வசதி அறிமுகம்

Aadmika
Apr 13, 2023,03:00 PM IST
சென்னை : சென்னையில் பெண்களால் இயக்கப்படும் ரேபிடோ பைக் சேவை முதல் கட்ட அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை இன்று முதல் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் முதல் கட்டமாக  ஆயிரம் விளக்குல, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, அரசினர் தோட்டம், எழும்பூர் ஆகிய 5 மெட்ரோ ரயில் நிலையங்களில் பெண்களால் இயக்கப்படும் ரேபிடோ பைக் இணைப்பு வசதி அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி கொடியசைத்து இந்த சேவையை துவக்கி வைத்தார்.



மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பிற்காக, பெண்களால் இயக்கப்படும் ரேபிடோ சேவை அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளதாக ராஜேஷ் சதுர்வேதி தெரிவித்தார். மேலும் மதுரையில் ரேபிடோ ஆப் மூலம் இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ரேபிடோ பைக் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.