பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா.. அன்பில் மகேஷ் பதில்.. "வாய்ப்பில்லை ராஜா"!

Su.tha Arivalagan
May 22, 2023,02:13 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதியன்றே பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு மாணவர்கள் விடுமுறையை அனுபவித்து வருகின்றனர். பிளஸ்டூ, பத்தாவது வகுப்பு தேர்வு முடிவுகளும்வெளியாகி விட்டன. 11ம்  வகுப்பு தேர்வு முடிவுகளும் கூட வெளியாகி விட்டன. நீட் தேர்வும் கூட நடந்து முடிந்து விட்டது. பிளஸ்டூ முடித்தவர்களுக்கு அடுத்து என்ஜீனியரிங் கவுன்சிலிங்கும் தொடங்கப் போகிறது.



ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வெயில் கடுமையாக இருப்பதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகலாமா என்ற எதிர்பார்ப்பில் மாணவர்களும், பெற்றோர்களும் உள்ளனர்.

ஆனால் அதற்கான வாய்ப்பில்லை என்று தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து அமைச்சர் அன்பில் மக��ஷ் செய்தியாளர்களிடம் பேசும்போது, திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும். அதில் மாற்றம் இல்லை. 1ம்  வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். 6 முதல் 12ம் வகுப்பு வரையிலானவர்களுக்கு ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறினார் அன்பில் மகேஷ்.

பள்ளிகள் திறப்பு திட்டமிட்டபடி இருக்கும் என்று எதிர்பார்த்த பெற்றோர்கள் தற்போது தங்களது பிள்ளைகளுக்கான சீருடை வாங்குவது, ஷூ, பேக் டிபன் பாக்ஸ், ஸ்னாக்ஸ் பாக்ஸ் வாங்குவது உள்ளிட்ட வேலைகளில் தீவிரமாகியுள்ளதால் இந்தக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.