ராம் சரண் மகளுக்கு தங்கத் தொட்டில் பரிசளித்த அம்பானி குடும்பம்...விலை எவ்வளவு தெரியுமா?

Aadmika
Jun 30, 2023,04:30 PM IST
டில்லி : நடிகர் ராம் சரணுக்கு பிறந்துள்ள பெண் குழந்தைக்கு தங்க தொட்டில் ஒன்றை பரிசாக வழங்கி உள்ளது அம்பானி குடும்பம். இதன் மதிப்பு அனைவரையும் வாயடைந்து போக வைத்துள்ளது. அம்பானி குடும்பம்னா சும்மாவா என கேட்டு வைத்துள்ளது.

தெலுங்கு சூப்பர் ஹீரோவான ராம் சரண் மற்றும் உபாசனாவிற்கு திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் தான் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு ஆத்யா என பெயரிட்டுள்ளனர். பெண் குழந்தைக்கு அப்பா ஆகி உள்ள ராம் சரணுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி வந்தனர்.



இந்நிலையில் அம்பானி குடும்பம், ராம் சரணுக்கு புதிதாக பிறந்துள்ள குழந்தைக்கு 24 காரட் தங்க தொட்டில் ஒன்றை பரிசாக வழங்கி உள்ளது. இதன் பதிப்பு 10 லட்சம் ஆகும். விலை மட்டுமல்ல இந்த தொட்டிலில் அனைத்தும் சிறப்பு தான். அன்பு மற்றும் ஆசியை வெளிப்படுத்தும் விதமான அடையா சின்னங்களும் உள்ளன. இரு குடும்பத்திற்கும் இடையாயான அன்பு மற்றும் நட்பை பலப்படுத்தும் விதமாக இந்த பரிசை அம்பானி குடும்பம் வழங்கி உள்ளது. 

ராம் சரணுக்கு அம்பானி குடும்பம் அளித்த இந்த தங்க தொட்டில் பரிசு பற்றி தான் பேச்சு தான் மீடியாக்களில் ஹாட் டாப்பிக்காக போய் கொண்டிருக்கிறது. அந்த தொட்டிலில் வேறு என்னவெல்லாம் சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது என்பதை தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.