தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம்...இலாகா இல்லாத அமைச்சரான செந்தில் பாலாஜி

Aadmika
Jun 15, 2023,03:02 PM IST

சென்னை : ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் நீதிமன்ற காவலில் உள்ளதால் அவர் கவனித்து வந்த இலாகாக்கள் பறிக்கப்பட்டு, மற்ற அமைச்சர்களிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி வகித்து வந்த அரசு துறைகள் மற்ற அமைச்சர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மின்சாரத்துறை தங்கம் தென்னரசுவிடமும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முத்துசாமியிடமும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன. அமைச்சர்களின் இந்த இலாக்கா மாற்றம் தொடர்பான அரசு உத்தரவு கவர்னரின் ஒப்புதலுக்காக அவரிடம் தமிழக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



தற்போது இலாகா இல்லாத அமைச்சராக தமிழக அமைச்சரவையில் செந்தில் பாலாஜி உள்ளார். அவர் தொடர்ந்து அமைச்சராக நீடிப்பார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அமைச்சரவையில் நடைபெற்றுள்ள இந்த இலாகா மாற்றத்தால் சோஷியல் மீடியாவில் #MinisterSenthilBalaji  #Cabinetreshuffle போன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன.