புத்தகப் பிரியர்களே ஹேப்பி நியூஸ்.. ஜனவரி 4ம் தேதி 47வது சென்னை புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது

Su.tha Arivalagan
Dec 20, 2023,05:51 PM IST

சென்னை: சென்னையில் 47வது புத்தகக் கண்காட்சி ஜனவரி 4ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


பபாசி எனப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் பிரமாண்டப் புத்தகக் கண்காட்சி ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நடத்தப்படும். அந்த வகையில் 47வது புத்தகக் கண்காட்சி ஜனவரி மாதம் 4ம் தேதி தொடங்கவுள்ளது. 




நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் மாலை 4 மணிக்கு புத்தகக் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ஜனவரி 21ம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும். தினசரி பல்வேறு நிகழ்வுகள், சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை இதில் இடம் பெறும் என்று அஏறிவிக்கப்பட்டுள்ளது. வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரையும், விடுமுறை நாட்களில் இரவு 11 மணி வரையும் தினசரி நிகழ்ச்சிகள் இடம்பெறும்.


வழக்கம் போல சிறப்பான முறையில் இந்த புத்தகக் கண்காட்சியை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அரங்கம் அமைக்கும் பணிகளும் பூமி பூஜையுடன் ஏற்கனவே தொடங்கி விட்டன. பல்வேறு தலைப்புகளில் ஏராளமான புத்தகங்கள் இந்த முறையும் இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.