அகமதாபாத் விமான நிலையத்தில் பரபரப்பு... 4 இலங்கை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைது!

Su.tha Arivalagan
May 20, 2024,04:16 PM IST

அமதாபாத்:  இலங்கையைச் சேர்ந்த 4 ஐஎஸ்ஐஎஸ் தீவரவாதிகள், அகமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்த நான்கு பேரையும் குஜராத் மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். அகமதாபாத் சர்தார் வல்லபாய் டேல் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த இந்த நான்கு பேர் மீதும் சந்தேகமடைந்த போலீஸார் அவர்களை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.


விசாரணையில் நான்கு பேருக்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து நா்கு பேரையும் போலீஸார் கைது செய்து அவர்களை ரகசிய இடத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு வைத்து நான்கு பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.




இவர்கள் ஏன் அகமதாபாத் வந்தனர். இங்கு அவர்களுக்கு யாருடன் தொடர்பு உள்ளது, என்ன திட்டத்துடன் வந்துள்ளனர் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்ததப்பட்டுள்ளது.