திண்டுக்கல், கள்ளக்குறிச்சிக்கு புது எஸ்.பி. நியமனம்.. 11 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

Su.tha Arivalagan
Dec 14, 2023,04:35 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: தமிழ்நாட்டில் 11 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


திண்டுக்கல் மாவட்ட எஸ்பியாக பிரதீப் நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சியின் புதிய எஸ்பியாக சமய் சிங் மீனா அறிவிக்கப்பட்டுள்ளார்.




மாற்றப்பட்டுள்ள 11 ஐபிஎஸ் அதிகாரிகள் குறித்த விவரம்:


1. சென்னை போக்குவரத்து துணை ஆணையாளராக,  வி. பாஸ்கரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2. மதுரை மாவட்ட துணை ஆணையாளராக  பி. பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

3. கோவை சிவில் சப்ளை சிஐடி பிரிவு காவல் கண்காணிப்பாளராக, எம் .சந்திரசேகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

4. சென்னை கிழக்கு சட்ட ஒழுங்கு  இணை ஆணையாளராக, தர்மராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

5. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல் தடுப்பு பிரிவு ஐஜி யாக, தமிழ்ச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

6. டான்ஜெட்கோ கண்காணிப் பிரிவு ஐஜி யாக ,பிரமோத் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

7. சென்னை சிறைத்துறை ஏடி ஜிபியாக மகேஸ்வர் தயாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

8. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளராக, கல்பனா நாயக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

9. டி .என்.பி.எல் நிறுவன தலைமை கண்காணிப்பு அதிகாரியாக, சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

10. திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஐபிஎஸ் அதிகாரி பிரதீப் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

11. கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சமய் சிங் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.