உத்தரகாண்ட் மாநிலத்தில் பயங்கரம்.. மின்சாரம் தாக்கி 10 பேர் பலி

Su.tha Arivalagan
Jul 19, 2023,01:18 PM IST

சாமோலி, உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் அலக்நந்தா ஆற்றங்கரையோரம் இருந்த டிரான்ஸ்பார்மர் வெடித்துச் சிதறியதில் 10 பேர் மின்சாரம் தாக்கி பலியானார்கள். பலர் படுகாயமடைந்தனர்.


அலக்நந்தா ஆற்றங்கரையோரம் பிபல்கோட்டி பகுதியில் நீர் மின்சாரத் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் அப்பகுதியில் முகாம் அமைத்து பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அந்த இடத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து மின்சாரம் பாய்ந்ததில் 10 பேர் பலியானார்கள். பலர் படுகாயமடைந்தனர்.


தீயில் கருகிய பலரை  சக ஊழியர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீயணைப்புப் படையினரும், மின்சாரத் துறையினரும் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். 


காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டஉள்ளதாக சாமோலி போலீஸ் எஸ்பி பர்மேந்திரா தோவல் கூறியுள்ளார்.  இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில டிஜிபி அசோக் குமார் தெரிவித்துள்ளார்.